SELANGOR

மீடியா சிலாங்கூரின் ஊழியர்கள் தேசிய மாதக் கொண்டாட்டத்தை நடத்தினர்

25 ஆகஸ்ட் 2023, 9:10 AM
மீடியா சிலாங்கூரின் ஊழியர்கள் தேசிய மாதக் கொண்டாட்டத்தை நடத்தினர்

ஷா ஆலம், ஆகஸ்ட் 25: மீடியா சிலாங்கூரின் ஊழியர்கள் இன்று மெனாரா பேங்க் ராக்யாட்டின் 11வது மாடியில் உள்ள அதன் அலுவலகத்தில் தேசிய மாதக் கொண்டாட்டத்தை நடத்தினர்.

தனது உரையில், வசதியான சூழ்நிலையிலிருந்து வெளியேறிய முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்-ஹாஜின் அணுகுமுறையைப் பின்பற்ற ஊழியர்களை அழைத்தார் தலைமை நிர்வாக அதிகாரி.

மன்னரின் பரம்பரையில் வந்த துங்கு, ஆடம்பரமான வாழ்க்கையைத் தேர்வு செய்யவில்லை, மாறாக நாட்டின் சுதந்திரத்தைக் கோருவதற்கான திட்டத்தை வழிநடத்தினார் என்று முகமட் ஃபரீத் மொஹமட் அஷாரி விளக்கினார்.

"ஒவ்வொரு நாளும் நம்மை நாமே சவால் செய்ய வேண்டும், நேற்றை விட இன்று சிறப்பாக இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். நமக்கு வசதியாக உள்ள சூழ்நிலையிலிருந்து வெளியேறாவிட்டால் வெற்றியையோ சுதந்திரத்தையோ அடைய முடியாது," என்று அவர் கூறினார்.

"நாம் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் அறிவை பெருக்கி கொள்ளவும்" என்று அவர் கூறினார்.

மலேசிய மடாணி மற்றும் தங்கால் 31 ஆகஸ்ட் உள்ளிட்ட தேசப்பற்று பாடல்களைப் பாடிய ஊழியர்கள் ஜாலூர் கெமிலாங்கை அசைத்தனர்.

தேசிய மாதத்தின் சின்னம் மற்றும் கருப்பொருளை விளக்கும் சிறு பதிவும் செய்யப்பட்டது. பின் குறுக்கெழுத்து புதிர், 14 மாநிலப் பகடை மற்றும் ருகுன் நெகாரா நாசி லெமாக் உள்ளிட்ட பல விளையாட்டுகளும் நடைபெற்றன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.