SELANGOR

வெள்ளம் ஏற்படுவதற்கு பராமரிக்கப்படாத வடிகால் அமைப்பு தான் காரணம்

25 ஆகஸ்ட் 2023, 8:56 AM
வெள்ளம் ஏற்படுவதற்கு பராமரிக்கப்படாத வடிகால் அமைப்பு தான் காரணம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 25: பத்து 18 உலு லங்காட்டைச் சுற்றி அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதற்கு அதிகாரிகளால் பராமரிக்கப்படாத வடிகால் அமைப்புதான் காரணம் ஆகும்.

வடிகால் அமைப்பு பராமரிக்கப்பட வேண்டும், இதனால் தண்ணீர் சீராகச் செல்லும் மற்றும் அடைப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தாது என டுசுன் துவா மாநில சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

பள்ளத்தில் உள்ள கால்வாய் போதுமான அகலம் இல்லாததால் அடிக்கடி திடீர் வெள்ளம் ஏற்படுகிறது என்று ஜோஹன் அப்துல் அஜீஸ் கூறினார்.

“ஒவ்வொரு வடிகால் அமைப்பையும் மீண்டும் கண்காணித்து, அப்பகுதியில் கனமழை பெய்யும் போது இனி வெள்ளம் ஏற்படாமல் பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்) பார்த்துக் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் வெள்ளம் மீண்டும் ஏற்படாத வகையில் இப்பகுதியில் உள்ள வடிகால்களை அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தப் பிரச்சனை ஜேகேஆர் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார் ஜோஹன்.

கம்போங் புக்கிட் ராஜாவில் உள்ள வடிகால் அமைப்பைக் கண்காணிப்பதுடன் மட்டுமல்லாமல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிய நன்கொடை வழங்குவதற்காக பத்து 18 யைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களை அவர் பார்வையிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.