ஷா ஆலம், ஆகஸ்ட் 25: இன்று பிற்பகல் வரை சிலாங்கூரில் உள்ள ஐந்து
மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு
மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவை சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு
லங்காட் ஆகிய மாவட்டங்கள் ஆகும் என்று முகநூல் மூலம் அந்நிறுவனம்
தெரிவித்துள்ளது.
பேராக், திராங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜொகூர், மலாக்கா மற்றும் சரவாக்
போன்ற பல மாநிலங்களிலும் இதே வானிலை தான் நிலவும் ஏற்படும் என்று
கணிக்கப்பட்டுள்ளது.
பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள்
தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின்
தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு
அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது
எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின்
முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப்
பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
அல்லது myCuaca பயன் பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.








