SELANGOR

ஜெலாஜா ஜோப்கேரின் இரண்டாவது தொடர் பெட்டாலிங் மாவட்டத்தில் தொடரும்

16 ஆகஸ்ட் 2023, 7:15 AM
ஜெலாஜா ஜோப்கேரின் இரண்டாவது தொடர் பெட்டாலிங் மாவட்டத்தில் தொடரும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 16: சிலாங்கூர் ஊழியர் அதிகாரமளிக்கும் பிரிவு (UPPS) ஏற்பாடு செய்துள்ள ஜெலாஜா ஜோப்கேரின் இரண்டாவது தொடர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பெட்டாலிங் மாவட்டத்தில் தொடங்குகிறது.

இத்திட்டத்தில் சிலாங்கூர் மக்களுக்காகப் பல்வேறு துறைகளில் இருந்து 20 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர் என தலைமை ஒருங்கிணைப்பாளர் விஜயன் சுப்ரமணியம் கூறினார்.

"முன்னதாக பெறப்பட்ட பொது மக்களின் நேர்மறையான கருத்துக்களைத் தொடர்ந்து இந்த இரண்டாவது தொடர் நடத்தப்படுகிறது மற்றும் ஒன்பது மாவட்டங்களில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாங்கள் ஜூலை 22 ஆம் தேதி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய திட்டமிட்டோம், ஆனால் மாநிலத் தேர்தல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

"மேலும் விண்ணப்பங்களை அனுப்பியவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உதவியுடன் வேலை கிடைக்க நாங்கள் உதவுவோம்," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இதற்கிடையில், இந்த சனிக்கிழமை அன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பாதுகாப்பு ஓட்டுநர் மையத்தில், ``UPPS`` பாதுகாப்பான ஓட்டுநர் பயிற்சியை ஏற்பாடு செய்யும் என்று விஜயன் தெரிவித்தார், இதில் 100 பி-பங்கிலான் தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள்.

"மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் சம்பந்தப்பட்ட பல விபத்துக்கள் நடப்பதை நாங்கள் கண்டறிந்தோம். சாலையில் பாதுகாப்பைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நோக்கத்தில் இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இதன் வழி, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மிகவும் கவனமாக இருப்பதோடு, சாலை விபத்துகளின் விகிதத்தையும் குறைக்க முடியும்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.