ஷா ஆலம், ஆக 11- மாநில அரசு அமைக்கப்பட்ட 100 நாட்களில் ஐந்து
வாக்குறுதிகளை முன்னிறுத்தி தனது தேர்தல் கொள்கையறிக்கையை
ஒற்றுமை அரசு நிறைவேற்றும்.
1. பெண் தொழிலாளர்களை போற்றும் விதமாக அவர்களின் குழந்தை
பராமரிப்பு செலவினத்தைக் குறைப்பதற்காக 5,00 வேலை செய்யும்
மகளிருக்கு தலா 1,000 வெள்ளி வழங்கப்படும்.
2. கிராமப்புற வீடுகள் மற்றும் மலிவு விலை வீடுகளுக்கான மதிப்பீட்டு
வரி ரத்து செய்யப்படும்.
3. சிலாங்கூரிலுள்ள 1,000 பட்டதாரிகள் 200 வெள்ளி மதிப்புள்ள கித்தா
சிலாங்கூர் பற்றுச் சீட்டு புத்தகங்களைப் பெறுவர்.
4. இமாம், பிலால் மற்றும் சியாக் அலவன்ஸ் உயர்த்தப்படும்
5. 500 விவசாயிகள், நெல் வேளாண் சாகுபடியில் ஈடுபட்டவர்கள் மற்றும்
மீனவர்கள் கித்தா சிலாங்கூர் வேளாண் மற்றும் மீன்பிடித் ஊக்கத்
தொகையாக தலா 1,000 வெள்ளியைப் பெறுவர்.








