ஷா ஆலம், ஆக 11- நாளை நடைபெவிருக்கும் மாநிலத் தேர்தலில்
சிலாங்கூர் மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் மீண்டும் வெற்றி பெற்றால்
எதிர்வரும் திங்கள்கிழமை மாநிலத்திற்குச் சிறப்பு பொது விடுமுறை
வழங்கப்படும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
அறிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் வெற்றி பெற்று மாநில அரசை
அமைத்தால் வரும் ஆகஸ்டு 14ஆம் தேதி அதாவது திங்கள்கிழமை சிறப்பு
விடுமுறையை வழங்க நாங்கள் இணங்கியுள்ளோம் என்று அவர்
சொன்னார்.
இன்று காலை தனது பேஸ்புக் வாயிலாக மாநில மக்களுக்கு ஆற்றிய
முக்கிய உரையில் சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான்
கூட்டணியின் தலைவருமான அமிருடின் இதனைக் கூறினார்.








