SELANGOR

10வது மக்கள் விளையாட்டு விழா (கசுரா) தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் - பெர்மாதாங் தொகுதி

8 ஆகஸ்ட் 2023, 6:07 AM
10வது மக்கள் விளையாட்டு விழா (கசுரா) தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் - பெர்மாதாங் தொகுதி

தஞ்சோங் காராங், ஆகஸ்ட் 8: பெர்மாதாங் தொகுதியில் வசிப்பவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 10வது மக்கள் விளையாட்டு விழா (கசுரா) மாநிலத் தேர்தல் முடிந்த பிறகு நடைபெறும்.

இந்த 'மினி சுக்மா' நிகழ்வில் பெர்மாதாங் தொகுதியில் உள்ள கிராமங்கள் கலந்து கொள்ளும் என்று அதன் வேட்பாளர் முகமட் யாஹ்யா மாட் ஷாரி கூறினார்.

"ஒவ்வொரு கிராமமும் குறைந்தது ஐந்து விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்பது நிபந்தனை" என்று பெர்மாதாங் தொகுதியின் பிரதான செயல்பாட்டு அறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் உள்ளரங்க விளையாட்டுகளுடன் கால்பந்து, ஃபுட்சல், நெட்பால், செபக் தக்ரா மற்றும் பூப்பந்து ஆகியவையும் நடைபெறும்.

2009 முதல் 2013 வரை தொகுதியின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியபோது, கிராமவாசிகளின் உறவை வலுப்படுத்துவது டன், விளையாட்டுகளில் இளம் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கத்துடன் கசூரா முகமட் யாஹ்யா மாட் ஷாரியால் தொடங்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.