ஷா ஆலம், ஆகஸ்ட் 7: டூசுன் துவா தொகுதி வேட்பாளர் மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) வெற்றி பெற்றால், அத்தொகுதியைப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றுவார்.
பல நீர்வீழ்ச்சிகளில் இங்குள்ளன அந்த வசதிகளை மேம்படுத்த தயாராக இருப்பதாக டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ் கூறினார் காரணம் அவை நூற்றுக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
"மேலும், இத்தொகுதி இரண்டு வெப்ப நீர் குளங்கள் மற்றும் குனோங் நுவாங்கை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"நான் வெற்றி பெற்றால், இந்த விஷயத்தில் கவனம் செலுத்தப்படும். நாங்கள் ஏற்கனவே உள்ள பொது உடைமைகளை மேம்படுத்துவோம் மற்றும் இவ்விடங்கள் வசதியாக இருப்பதை உறுதிப்படுத்துவோம். மேலும், பலர் இவ் விடங்களுக்கு வருகை புரியும் போது, சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
உள்ளூர்வாசிகள் வசதிக்காக மாற்று வழிகள் உட்பட சாலை உள்கட்டமைப்பு மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஜோஹன் கூறினார்.
"இங்கு விடுமுறை நாள் என்றால் சாலை நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எடுத்துச் சென்று தீர்வு காண்போம்," என்றார்.
மாநிலத் தேர்தலில் மூடா வேட்பாளர் அல் ஹபீஸ் இக்வான் முகமட் ஆசாட் மற்றும் அசார் ஹம்பலி (பெரித்தான் நேஷனல்) ஆகிய இரு போட்டியாளர்களை டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ் எதிர்கொள்கிறார்.








