கோம்பாக், ஆகஸ்ட் 6: பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேசனல் (பிஎன்) ஆகிய கட்சிகளின் ஒழுக்கமும் ஒற்றுமை உணர்வும் கோம்பாக்கில் மூன்று கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவும்.
ஆகஸ்ட் 12 அன்று அனைத்து தொகுதிகளும் கைப்பற்றப் படுவதை உறுதி செய்வதில் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற தாங்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சிலாங்கூர் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"கோம்பாக்கில் நாம் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று நான் நம்புகிறேன், இந்த முறை வெற்றியை உறுதி செய்ய நாம் கடினமாக உழைக்க வேண்டும்" என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
குறிப்பிட்ட மூன்று தொகுதிகள் சுங்கை துவா, உலு கிள்ளாங் மற்றும் கோம்பாக் செத்தியா ஆகியவை ஆகும்.
இதற்கிடையில், வாக்காளர்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் பிரச்சாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேசனலின் தீவிரம் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் வெற்றி தனக்கு சாதகமாக இருக்கும் என்று மெஹாட் சூர்கர்ணையின் நம்புகிறார்.








