கோம்பாக், ஆகஸ்ட் 4: பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் இடையேயான வலுவான கூட்டணி, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சிலாங்கூரின் பெயரை மேலும் உயர்த்தும் என நம்பப்படுகிறது.
மாநிலத் தேர்தலில் சிலாங்கூர் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால், மாநிலம் குறிப்பாக வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த அம்சங்களில் சிறந்து விளங்கும் என்று அதன் தலைவர் நம்புகிறார்.
"நாம் வெற்றியை உறுதி செய்தால், சிலாங்கூர் பிஎன் நட்பு நிர்வாகத்தின் பாரம்பரியம் மற்றும் ஹராப்பான் தலைமையிலான வளர்ச்சி மற்றும் நலன் குறித்த புதிய திட்டங்களுடன் வெகுதூரம் முன்னேறுவோம் என்று நான் நம்புகிறேன்.
"நாம் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ஒரு முன்மாதிரியாக மாறுவோம்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஹராப்பான் தற்போது பல்வேறு திட்டங்களை செய்து வருவதைப் போல, எதிர்க்கட்சிகள் செய்ய இயலுமா என கேள்வி எழுப்பினார்.
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மக்களுக்காகக் காப்புறுதி திட்டத்தை உருவாக்கிய ஒரே மாநிலம் சிலாங்கூர் என்று சுங்கை துவா தொகுதி வேட்பாளர் விளக்கினார்
"இதைத்தான் அவர்கள் (பெரிகத்தான் நேஷனல்) மாற்ற விரும்புகிறார்களா? அவர்கள் என்ன வழங்குகிறார்கள்? எதுவும் இல்லை," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், சிலாங்கூரில் குழாய் மாற்று விவகாரம் தொடர்பான உண்மைகளைத் திரிப்பதோடு, அடிக்கடி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் மந்திரி புசாரையும் அமிருடின் விமர்சித்தார்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில், 600 கி.மீ., குழாய்கள் 700 மில்லியன் ரிங்கிட் செலவில் மாற்றப்பட்டன.
"தற்போது 600 கி.மீ.க்கு குழாய்கள் மாற்றியுள்ளோம், அதுவும் தொற்றுநோய் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக இப்பணி நிறுத்தப்பட்டது. இல்லை என்றால், 700 கிமீக்கு மேல் இருக்கும்," என்று அவர் விளக்கினார்.








