செமினி, ஆகஸ்ட் 4: மாநிலத் தேர்தலில் செமினி தொகுதியில் பாரிசான் நேஷனல் (BN) வேட்பாளர் வெற்றி பெற்றால், பூர்வீகக் குடியினர் கிராமங்களில் பொது வசதிகளை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளார்.
அவர்களின் வசதிகளை மேம்படுத்துவதோடு, பூர்வீகக் குடியினர் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர்களை நியமிப்பது டன் கணினி மையத்தையும் உருவாக்குவதாக வான் சுலைக்கா அனுவா கூறினார்.
"பூர்வீகக் குடியினர் கல்வியில் பின் தங்காமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். அதனால், நான் ஒரு பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களின் சமூகத்திற்கான தொழில் திட்டமிடலின் ஈடுபடுவேன்.
" எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். செமினி தொகுதி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவேன் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்று 49 வயதான வேட்பாளர் கூறினார்.
மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் பெரிகாத்தான் நேஷனல் (PN) பிரதிநிதி நுஷி மஹ்ஃபோட்ஸை எதிர்த்து போட்டியிடுகிறார்.








