ஷா ஆலம், ஆகஸ்ட் 4: மக்கள் தேவைகள் மற்றும் சிக்கல்களை தீர்க்க உடனடி சேவை மையம் ஒவ்வொரு மாவட்ட அலுவலகம் மற்றும் நகராட்சியில் நிறுவ வேண்டும் .
டிஜிட்டல் மயமாக்கல் என்பது எல்லா காரியங்களையும் விரைவாக ,சரியாக செய்வதை நோக்கமாக கொண்டது. அதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன, அதனை அனைத்து தரப்பினரும் விளங்கிக்கொண்டு அதற்கு ஏற்ப பணியாற்றினால் , 90 சதவீத அரசாங்க விவகாரங்களை டிஜிட்டல் முறையில் செய்வதை எளிதாக்குதலை இலக்காகக் கொண்டுள்ளார் மந்திரி புசார்
சேவை தரத்தை மேம்படுத்தும் திட்டங்கள்:
-
முக்கியமான சிக்கல்களை 24 மணி நேரத்திற்குள் களைய ஒவ்வொரு பிபிடியிலும் சிறப்பு நிறுத்து மையம் அமைத்தல்
-
அரசாங்க விவகாரங்களை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளுதல்
-
பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் கிள்ளான் ஆகியவை கிள்ளான் பள்ளத்தாக்கு நிர்வாக மாதிரியாக உருவாக்குதல்
-
வர்த்தகர்கள் டிஜிட்டல் முறைக்கு மாற ஊக்குவித்தல்
-
குப்பை சேகரிப்புக்கான தானியங்கி தொழில்நுட்பம்
-
குடியிருப்பு பகுதிகளில் கழிவுகளை பிரிக்கும் அமைப்பை வழங்குதல்
-
அரசு மற்றும் உள்ளாட்சி கட்டிடங்களில் முழுமையான சோலார் பேனல்கள் போன்ற திட்டங்களை மந்திரி புசார் குறிப்பிட்டார்.








