ஷா ஆலம், ஆகஸ்ட் 4: சிலாங்கூரில் இளைஞர்களுக்கு அதிக ஊதியம் தரும் 100,000 வேலை வாய்ப்புகளை வழங்கப்படும்.
பொருளாதார அமைச்சரால் அறிவிக்கப்பட்ட புதிய கொள்கைகளை அறிமுகப் படுத்தியதோடு, முதல் சிலாங்கூர் திட்டத்தின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை சாத்தியமானது என்று மந்திரி புசார் விளக்கினார்.
இளைஞர்களுக்கான பிற திட்டங்கள்:
-
ஒவ்வொரு மாவட்டத்திலும் கித்தா சிலாங்கூர் இ-ஸ்போட் மையங்களை உருவாக்குதல்
-
2025ஆம் ஆண்டு மலேசியா கோப்பை, சுக்மா, சூப்பர் லீக், மற்றும் 2027 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஆகியவற்றில் சாம்பியன் ஆவது
-
2,000 சிலாங்கூர் இளைஞர்களுக்கு மாதந்தோறும் RM1,500 சம்பளத்துடனான தொழில்துறை பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்குதல்
-
ரோடா டாருள் ஏஹ்சான் (RIDE) திட்டத்தை இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு விரிவுபடுத்துதல்








