SELANGOR

விவசாயிகளின் நலனை பாதுகாக்க குரல் கொடுப்பதாக உறுதி - பெர்மாதாங் தொகுதி

1 ஆகஸ்ட் 2023, 10:35 AM
விவசாயிகளின் நலனை பாதுகாக்க குரல் கொடுப்பதாக உறுதி - பெர்மாதாங் தொகுதி

தஞ்சோங் காராங், ஆகஸ்ட் 1: பெர்மாதாங் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் (ஹோப்) வேட்பாளர் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் நலனை பாதுகாக்க குரல் கொடுப்பதில் உறுதியாக உள்ளார்.

விவசாயிகளின் வருமான ஆதாரத்தை பாதிக்கும் நெல் உற்பத்தி செலவை அதிகரிப்பது தொடர்பான விவகாரம் மத்திய அரசின், குறிப்பாக வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று முகமட் யாஹ்யா மாட் சாஹ்ரி அல்லது பாக் யா கூறினார்.

இவ்வாறு, பெர்மாதாங் தொகுதியில் விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடியைச் சமாளிக்க மூன்று வழிமுறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

"நெல் உற்பத்தியை அதிகரிக்க நில மறுசீரமைப்பு திட்டத்தை பாக் யா பரிந்துரைத்தார்.

மேலும், நெல் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு நெல் மற்றும் உர மானியங்களை அதிகரிக்க பாக்யா பரிந்துரைத்தார். மேலும், தான் இந்த ஆலோசனையை விவசாய அமைச்சகத்திடம் கொண்டு செல்வேன்" என்று ஹரப்பான் இயக்க மையத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

மாநிலத் தேர்தலில் பெர்மாதாங் தொகுதி இரு தரப்பினருக்கு இடையே போட்டியை காண்கிறது அதாவது பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) நூருல் சியாஸ்வானி நோவாவை பாக் யா எதிர்கொள்கிறார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.