ஷா ஆலம், ஜூலை 26: மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) பாரிசான் நேஷனல் (பிஎன்)
வேட்பாளர் வெற்றி பெற்றால், சுங்கை புரோங் தொகுதியில் வறுமை பிரச்சனையை
ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தார்.
கிராமப்புற சுற்றுலாவை மேம்படுத்தி உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்புகளை
உருவாக்க விரும்புவதாக 53 வயதான முகமட் கிர் ரம்லி கூறினார்.
“நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்களின் நலனை பாதுகாப்பதில் முந்தைய
மக்கள் பிரதிநிதிகள் செய்த அனைத்து பணிகளையும் தொடர்வேன். கூடுதலாக, மக்கள் வருமானம்
நம்புகிறேன், என்றும் அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
சுங்கை புரோங் தொகுதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றி கேட்டபோது,
இந்த இடம் தன்னுடைய பூர்வீகமாக இடமாக இருப்பதால் வாக்காளர்களை கவர இயலும்
என்று நம்புவதாக முகமட் கிர் கூறினார். இதனால் தொகுதியில் பிஎன் ஆதிக்கத்தைத்
தக்க வைக்க முடியும் என்றார்.
இந்த தேர்தலில் சுங்கை புரோங் தொகுதியைப் பாதுகாக்க பிஎன் பரிந்துரைக்கப்பட்ட
புதிய முகம் முகமட் கிர் ஆவர்.








