SELANGOR

இளைஞர்களின் விளையாட்டு நடவடிக்கைகள்,  தவறான நடவடிக்கைகளில் இருந்து அவர்களை விடுவிக்கும்  – மந்திரி புசார்

24 ஜூலை 2023, 5:30 AM
இளைஞர்களின் விளையாட்டு நடவடிக்கைகள்,  தவறான நடவடிக்கைகளில் இருந்து அவர்களை விடுவிக்கும்  – மந்திரி புசார்

கோம்பாக், ஜூலை 24: சமூக ஊடகங்களின் எதிர்மறையான தாக்கத்தை தவிர்க்க இளைஞர்கள் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் அழைப்பு விடுத்தார்.

விளையாட்டு நடவடிக்கை பல இனங்கள் மற்றும் மதங்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

" சமூகம் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் ஒற்றுமையை மேம்படுத்தி எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன.

“இங்கே, நீங்கள் எந்த அணியையும், மதத்தையும் அல்லது தரப்பையும் ஆதரிக்கலாம். தொற்று நோய்க்குப் பிறகு நாட்டை மீட்டெடுப்பதற்கான எங்கள் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்" என்று அவர் கூறினார்.

இங்குள்ள கேஎஸ்எல் ஸ்போர்ட் ஃபுட்சால், பத்து கேவ்ஸில் நடைபெற்ற அமைச்சூர் கோப்பை  ஃபுட்சல் போட்டியின் நிறைவு விழாவில் அமிருடின் தனது உரையில் இவ்வாறு கூறினார்.

மேலும், இந்நிகழ்விற்கு சிலாங்கூர் மஇகா இளைஞரணித் தலைவர் சுந்தரம் குப்புசாமி; கோம்பாக் மஇகா பிரிவு தலைவர், கே கோபிராஜ் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் நண்பர்களும் வருகை புரிந்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.