SELANGOR

முதல் சிலாங்கூர் திட்டம் (RS-1) சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கும்

23 ஜூலை 2023, 5:37 AM
முதல் சிலாங்கூர் திட்டம் (RS-1) சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 23: முதல் சிலாங்கூர் திட்டம் (RS-1), இளைஞர்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மாநில அரசின் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகும்.

குறைந்தபட்ச ஊதியமாக RM2,000 க்கும் அதிகமான வருமானம் கொண்ட வேலைகள் வழங்குவதே மாநில அரசின் நோக்கம் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“மாணவர்கள், பீ-பங்கிலான் பணியாளர்கள், பொதுத்துறை, தனியார் துறை, பதின்ம வயதினர், இடைநிலை மற்றும் ஆரம்பப் பள்ளி என அனைத்து நிலை இளைஞர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மாநில அரசு திட்டங்களை உருவாக்குகிறது.

"மாநிலம் தொடர்ந்து சிறப்பாக இயங்கவும், மனித வளங்களில் பலம் பெறவும் மற்றும் மலேசியப் பொருளாதாரத்தில் முதலிடம் வகிக்கும் திறனைப் பெறவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் 40 வயதுக்கு கீழ் உட்பட்டவர்கள் என்பதால் சிலாங்கூர் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய இளைஞர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள் என்று அமிருடின் மேலும் கூறினார்.

“நாட்டிலும் குறிப்பாக மாநிலத்திலும் இளைஞர்களின் ஈடுபாடு முக்கியமானது. அதனால்தான் அவர்கள் பிறந்ததிலிருந்து பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் வரை பல திட்டங்களை செயல்படுத்துகிறது.

"அதிக நம்பிக்கை கொடுக்கப்பட்டால், புதிய மற்றும் அதிக வருமானம் கொண்ட தொழில்களை உருவாக்க இத்திட்டம் தொடர்ந்து பலப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.