SELANGOR

சிலாங்கூர் அளவிலான ஜுவாலான் அக்ரோ மடாணி விற்பனைத் திட்டம்

18 ஜூலை 2023, 8:28 AM
சிலாங்கூர் அளவிலான ஜுவாலான் அக்ரோ மடாணி விற்பனைத் திட்டம்

ஷா ஆலம், ஜூலை 18: இன்று செகின்சானில் உள்ள எம்செகின் வொண்டர்லேண்டில் நடைபெறும் சிலாங்கூர் அளவிலான ஜுவாலன் அக்ரோ மடாணி விற்பனைத் திட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு காலை 9 மணி அளவில் தொடங்கப்படும்.

இந்த விற்பனையில் சந்தை விலையை விட 30 சதவீதம் வரை குறைவான விலையில் புதிய தயாரிப்புகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் (KPKM) வழங்குகிறது. அவற்றில் காய்கறிகள், பழங்கள், கோழி, முட்டை, மீன் மற்றும் இறைச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கும்.

இந்த விற்பனை திட்டத்தைக் கூட்டாட்சி விவசாய சந்தைப்படுத்தல் வாரியம் (Fama), விவசாயிகள் அமைப்புகளின் வாரியம் (LPP) மற்றும் மலேசிய மீன் மேம்பாட்டு வாரியம் (LKIM) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்த, விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் மீனவர்கள் போன்ற இலக்கு குழுக்களை ஒன்றிணைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க உள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.