SELANGOR

கமுடா கோவ் ஸ்பிளாஸ் மானியா வாட்டர் தீம் பார்க் டத்தோ மந்திரி புசாரால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்படும்

27 ஜூன் 2023, 3:33 AM
கமுடா கோவ் ஸ்பிளாஸ் மானியா வாட்டர் தீம் பார்க் டத்தோ மந்திரி புசாரால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்படும்

ஷா ஆலம், ஜூன் 27: கோலா லங்காட்டின் கமுடா கோவ் ஸ்பிளாஸ் மானியா வாட்டர் தீம் பார்க் ஜூலை 2 ஆம் தேதி டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியால் தொடக்கி வைக்கப்படும்

6.47 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாட்டர் தீம் பார்க் சிலாங்கூரில் உள்ள புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும் என்று சுற்றுலா துறை பொறுப்பு உறுப்பினர் ஹீ லாய் சியான் கூறினார்.

"இந்த தீம் பார்க் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு (KLIA) அருகாமையில் இருப்பதால் பொழுது போக்கிற்காகப் பலரின் மையமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

"உண்மையில், ஸ்பிளாஸ் மேனியா திறப்புடன், சிலாங்கூருக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

டெங்கிலில் உள்ள பாயா இண்டா வெட்நென்ஸ் மற்றும் கோலா சிலாங்கூர் மற்றும் செகிஞ்சனில் உள்ள சில பகுதிகள் மாநிலத்தின் சமீபத்திய ஈர்ப்பாக இருக்கும் இடங்கள் என்று லாய் சியான் கூறினார்.

"இதன்வழி மாநிலத்தின் ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இலக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் எட்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி திறக்கப்பட்ட ஸ்பிளாஸ் மானியா வாட்டர் தீம் பார்க், 24 ஸ்லைடிங் கேம்கள் உட்பட 39 விளையாட்டுகளை வழங்குகிறது மற்றும் ஒரே நேரத்தில் 4,000 வருகையாளர்களுக்கு இடமளிக்க முடியும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.