SELANGOR

20,000க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் திறனை வளர்ப்பதோடு அவர்களின் சமூகப் பொருளாதார நிலையையும் மேம்படுத்தியுள்ளனர் -  வனிதா பெர்டாயா சிலாங்கூர் திட்டம்

26 ஜூன் 2023, 1:18 PM
20,000க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் திறனை வளர்ப்பதோடு அவர்களின் சமூகப் பொருளாதார நிலையையும் மேம்படுத்தியுள்ளனர் -  வனிதா பெர்டாயா சிலாங்கூர் திட்டம்

ஷா ஆலம், ஜூன் 26: வனிதா பெர்டாயா சிலாங்கூர் (WBS) திட்டத்தின் கீழ் 20,000 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் திறனை வளர்ப்பதோடு அவர்களின் சமூகப் பொருளாதார நிலையையும் மேம்படுத்தும் பலன்களைப் பெற்றுள்ளனர்.

மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெண்கள் உதவும் வகையில் அவர்களின் திறன் மேம்பாட்டுக்கு  தொடர்ந்து வழிகாட்டும்  திட்டங்கள் முக்கியம் என அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் சூன் 3 கவுன்சிலர் அன்ஃபால் சாரி கூறினார்.

"உதாரணமாக, சிலாங்கூர் மகளிர் உதவித்தொகை முனைவர் பட்டம் பெறும் வரை பயன்படுத்தலாம். மேலும், வன்முறை மற்றும் பாலின பிரச்சனைகளிலிருந்து இருந்து பெண்களைப் பாதுகாக்க வனிதா பெர்டாயா சிலாங்கூர் தங்குமிடம் மானியம் வழங்குகிறது.

"இந்த திட்டமானது தலைமை, கல்வி, குடும்பம், பொருளாதாரம், சுகாதாரம் முதல் சமூகப் பொருளாதாரம் வரை பல்வேறு அம்சங்களில் பெண்களை மேம்படுத்துகிறது.

சிலாங்கூர் பெண்கள் கொள்கைக்கு ஏற்ப, தொடர்ச்சியான கல்வியின் மூலம் பெண்களுக்கு அறிவு மற்றும் உயர் திறன்களை வழங்குவதை இந்த உதவித்தொகை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2021 இல் தொடங்கப்பட்ட வனிதா பெர்டாயா சிலாங்கூர் உதவித்தொகை வாழ்நாள் கற்றல் திட்டத்தை (PPSH) செயல்படுத்தும் மாநில அரசின் முயற்சியாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.