ECONOMY

மதிப்பீட்டு வரியைச் செலுத்த தவறிய ஐந்து வளாகங்களுக்கு சீல் வைப்பு-எம்.பி.ஏ.ஜே. நடவடிக்கை

24 ஜூன் 2023, 5:26 AM
மதிப்பீட்டு வரியைச் செலுத்த தவறிய ஐந்து வளாகங்களுக்கு சீல் வைப்பு-எம்.பி.ஏ.ஜே. நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 24-  மதிப்பீட்டு வரியைச் செலுத்த தவறிய காரணத்திற்காக ஐந்து வளாகங்களுக்கு அம்பாங் ஜெயா  நகராண்மைக் கழகம் சீல் வைத்துள்ளது.

தாமான் இண்டஸ்ட்ரி லெம்பா ஜெயா, தாமான் இண்டஸ்ட்ரி கம்போங் தாசேக்  தம்பஹான், தாமான் கெஞ்சானா ஆகிய பகுதியில் உள்ள ஐந்து வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது என்று அம்பாங் ஜெயா  நகராண்மைக் கழகம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 45 ஆயிரத்து 256 வெள்ளி 32 காசு மதிப்பீட்டு வரி பாக்கியை வைத்திருந்த காரணத்திற்காக அந்த ஐந்து வளாகங்களும் சீல் வைக்கப் பட்டதாக  அது குறிப்பிட்டது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட அந்த அமலாக்க நடவடிக்கையின் மூலம் சம்பந்தப்பட்ட அந்த ஐந்து வளாகங்களில் இருந்து 15 ஆயிரத்து 140 வெள்ளி 19 காசு வரியாக வசூலிக்கப்பட்டதாக  அது தெரிவித்தது.

எனினும் இந்த சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வளாக உரிமையாளர்கள் நகராண்மைக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மதிப்பீட்டுத் தொகையை தவணை  முறையில் செலுத்துவதாக வாக்குறுதி அளித்தனர்.

நகராண்மைக் கழகத்தின் வருமானப் பிரிவு, அமலாக்கப் பிரிவு சட்டப்பிரிவு, லைசன்ஸ் பிரிவு,  தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு, நகர திட்டமிடமிடல் பிரிவு  ஆகியவை ஒன்றிணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன..

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.