SELANGOR

மறுசுழற்சி செய்யப்பட்ட பேனர்களைப் பயன்படுத்தி பைகளைத் தைக்கும் நிகழ்வு

19 ஜூன் 2023, 9:48 AM
மறுசுழற்சி செய்யப்பட்ட பேனர்களைப் பயன்படுத்தி பைகளைத் தைக்கும் நிகழ்வு

ஷா ஆலம், 19 ஜூன்: கடந்த சனிக்கிழமை பத்து 15 டுசுன் துவாவில் உள்ள பாலாய் ரயாவில் மறுசுழற்சி செய்யப்பட்ட பேனர்களைப் பயன்படுத்தி பைகளைத் தைக்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 30 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.

மறுசுழற்சி செய்யப்பட்ட பேனர்களைப் பயன்படுத்தி தைக்கும் நடவடிக்கையில், பங்கேற்பாளர்களின் அடிப்படை திறன்கள் மற்றும் தையல் நுட்பங்களை மேம்படுத்த உதவும் வகையில் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் காஜாங் நகராண்மை கழகம் தெரிவித்தது.

"இந்தத் திட்டம் உள்ளூர் மக்களின் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சட்டவிரோதப் பேனர்களின் சிக்கலைக் குறைக்கவும் உதவும்" என்று அதன் முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

காஜாங் நகராண்மை கழக மேம்பாடு திட்டமிடல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்ச்சி, முதல் பகுதி மற்றும் பகுதி 2 டின் குடிமைப் பிரதிநிதி கவுன்சிலின் (MPP) பங்கேற்புடன் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.