SELANGOR

புயலால் சேதமடைந்த கூரையைச் சரி செய்ய மோரிப் தேசியப் பள்ளிக்கு RM20,000 நன்கொடை

19 ஜூன் 2023, 9:46 AM
புயலால் சேதமடைந்த கூரையைச் சரி செய்ய மோரிப் தேசியப் பள்ளிக்கு RM20,000 நன்கொடை

ஷா ஆலம், 19 ஜூன்: கடந்த வாரம் புயலால் சேதமடைந்த கூரையைச் சரிசெய்வதற்காக மோரிப் தேசியப் பள்ளிக்கு உடனடியாக RM20,000 த்தை நன்கொடையாக சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம் பி ஐ வழங்கியது.

ஜூன் 15 அன்று ஏற்பட்ட புயலால் பள்ளி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது என்று எம்பிஐ சமூகப் பொறுப்பு மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அஹ்மத் அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.

“கடந்த வியாழன் அன்று, மோரிப் பிரதிநிதி ஹஸ்னுல் பஹாருடினுடன் நான் இந்தப் பள்ளிக்குச் சென்றேன். இந்தப் பள்ளிதான் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது.

“பள்ளியின் மேற்கூரையைச் சரி செய்ய எம்.பி.ஐ ஏற்கனவே RM20,000 நன்கொடையாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது,” என்று அவர் இன்று முகநூலில் தெரிவித்தார்.

இந்த நன்கொடையை அஹ்மத் அஸ்ரி இன்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் (PIBG) வழங்கினார். அதற்கு கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் சாட்சியாக இருந்தார்.

அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட பள்ளிக்கு உதவ RM150,000 ஒதுக்கப்படும் என்றும் அஹ்மட் அஸ்ரி தெரிவித்தார்.

"மாநிலக் கல்வி இயக்குநர் டாக்டர் ஜாஃப்ரி அபு தெரிவித்தபடி சிலாங்கூர் மாநில கல்வித் துறையிலிருந்து கூடுதலாக RM20,000 வழங்கப்படும்" என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.