SELANGOR

மோரிப் கடற்கரை ஜூலை 2 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது

16 ஜூன் 2023, 2:39 AM
மோரிப் கடற்கரை ஜூலை 2 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது

ஷா ஆலம், ஜூன் 16: நேற்று பந்திங்கில் உள்ள மோரிப் கடல் ஓரத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையால் அப்பகுதியில் விழுந்த மரங்களை வெட்டி சுத்தம் செய்வதற்காக மோரிப் பொழுதுபோக்கு பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு ஜூலை 2 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

கடற்கரைப் பகுதியைச் சுத்தம் செய்வதற்கும் சேதங்களை சரிசெய்வதற்கும் அவ்விடம் மூடுடப்பட்டது என கோலா லங்காட் நகராண்மை கழகம் (MPKL) தனது முகநூலில் வெளியிட்ட ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தது.

நேற்று மாலை முதல் கோலா லங்காட் நகராண்மைக் கழகத்தின் ஸ்குவாட் பந்தாஸ், தீயணைப்புத் துறை, மலேசியக் குடிமைத் தற்காப்புத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து மரங்களை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.பி.கே.எல் தெரிவித்தது.

– பெர்னாமா

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.