ஷா ஆலம், ஜூன் 14: கடந்த மாத இறுதியில் தொடங்கப்பட்ட இரண்டாம் கட்ட இலவச மருத்துவ பரிசோதனை திட்டம் ஜூன் 18 ஆம் தேதி சுங்கை கண்டிஸ் தொகுதியில் முடிவடைகிறது.
கம்போங் புக்கிட் நாகாவில் உள்ள ஷா ஆலம் மாநகர பொது மண்டபத்தில் நடைபெறும் இம் மருத்துவ பரிசோதனையில் பொது சுகாதார எஸ்கோ உள்ளூர்வாசிகளைக் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பரிசோதிக்க ஊக்குவிக்கிறது.
"உடல் பரிசோதனை, இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, கண்கள், பற்கள், காதுகள் பரிசோதனைகள் மற்றும் பிசியோதெரபி ஆகிய சேவைகளைப் பயன்படுத்தி கொள்ள தவறாதீர்கள்" என்று டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் இன்று முகநூலில் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் ஸ்கிரீனிங் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு RM3.4 மில்லியன் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.








