SELANGOR

2,000க்கும் மேற்பட்டோர் வாகனம் இல்லாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் – ஷா ஆலம் மாநகராட்சி

12 ஜூன் 2023, 4:51 AM
2,000க்கும் மேற்பட்டோர் வாகனம் இல்லாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் – ஷா ஆலம் மாநகராட்சி

ஷா ஆலம், ஜூன் 12: 2,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் ஷா ஆலமில் நடைபெற்ற வாகனம் இல்லாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு டத்தாரான் மெர்டேகாவில் காலை 7 மணி அளவில் ஐந்து கிலோமீட்டர் ஓட்டத்துடன் தொடங்கியது.

இந்த திட்டம் வார இறுதியில் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பயனுள்ள ஓய்வு நேர செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும், சுற்றுச்சூழல் மீதான அக்கறையின் அடையாளமாகவும் உள்ளது என ஷா ஆலம் துணை மேயர் ஐஆர் ஜெரிமி தர்மன் தெரிவித்தார்.

"இந்தப் பகுதியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பாதைகளை 4 மணி நேரம் நாங்கள் மூடிவிட்டோம், மேலும் வார இறுதியில் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தினோம்," என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் நிதானமாகச் சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக்ஸ், எம்பிஎஸ்ஏ நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, 'பெட்டிங் ஜூ' மற்றும் நாட்டுப்புற விளையாட்டுகள் போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றன.

நடமாடும் நூலகம் மற்றும் SEDA-10 கண்காட்சி போன்ற பல்வேறு சேவை கவுண்டர்களையும் ஷா ஆலம் மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.