SELANGOR

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஶ்ரீ செர்டாங் தொகுதி RM25,164.60யை நன்கொடையாக வழங்கியது

1 ஜூன் 2023, 8:48 AM
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஶ்ரீ செர்டாங் தொகுதி RM25,164.60யை நன்கொடையாக வழங்கியது

பூச்சோங், ஜூன் 1: இங்குள்ள சுங்கை ராசாவ் ஹிலிர் பழங்குடி கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஶ்ரீ செர்டாங் தொகுதி RM25,164.60யை நன்கொடையாக வழங்கியது.

கடந்த ஏப்ரல் 28-ம் தேதி இந்த கிராமத்தில் புயல் தாக்கி 10 வீடுகள் பாதிக்கப்பட்டதாக ஶ்ரீ செர்டாங் தொகுதி உறுப்பினர் சிறப்பு அதிகாரி டேனியல் ஆல்-ராசிட் ஹருன் கூறினார்.

"உதவி உபகரணங்கள் வடிவில் வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களிடம் ஏற்பட்ட சேதத்தை விவரமாகக் கேட்டு, பின்னர் நாங்கள் பொருட்களை விநியோகிக்கிறோம்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சீரமைக்க உதவுவதுடன், பழமையான வீடுகளில் உள்ள குடும்பங்களுக்கும் நன்கொடை வழங்குகிறோம், என்றார்.

ஶ்ரீ செர்டாங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் சித்தி மரியா மமுட்டின் பிரதிநிதியான அவர், வழங்கப்படும் உதவி குடியிருப்பாளர்களின் சுமையைக் குறைக்கும் மற்றும் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்று நம்புகிறார்.

இதற்கிடையில், தோக் பாத்தின் பஹாருடின் பாக்கார், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைச் சரிசெய்ய உதவும் நன்கொடையை வழங்கியதற்காக சட்டமன்ற உறுப்பினருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

"அதிர்ஷ்டவசமாகப் புயலின் போது உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சில சொத்துச் சேதங்கள் உட்பட வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டன," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.