SELANGOR

381 கிலோகிராம் சமையல் எண்ணெய் மறுசுழற்சி திட்டத்தின் மூலம் சேகரிப்பு

1 ஜூன் 2023, 1:36 AM
381 கிலோகிராம் சமையல் எண்ணெய் மறுசுழற்சி திட்டத்தின் மூலம் சேகரிப்பு

செலாயாங், மே 31: செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) 381 கிலோகிராம் சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி திட்டத்தின் மூலம் மே 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சேகரித்தது.

ஆசிரியர் தினம், அன்னையர் தினம் மற்றும் செவிலியர் தினங்களை முன்னிட்டு 135 பங்கேற்பாளர்கள் இத்திட்டத்தில் பங்கேற்றனர் என்று யாங் டிபெர்துவான் டத்தோ முகமட் யாசிட் சாய்ரி கூறினார்.

“கடந்த ஆண்டு 110 கிலோகிராம் எண்ணெய் சேகரிக்கப்பட்ட நிலையில் இம்முறை சேகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயின் அளவு 246 சதவீதம் அதிகரித்துள்ளது.

"சேகரித்த எண்ணெயைப் பயோடீசல் பொருளாகவும், கார்ப்பரேட் நினைவுப் பொருளான மெழுகுவர்த்திகளாகவும் பயன்படுத்துவதற்குச் செயலாக்க நிறுவனங்களுக்கு மறுவிற்பனை செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க மற்றும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் நடைமுறையை சமூகத்திடம் வளர்க்க மறுசுழற்சி நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என்று முகமட் யாசிட் மேலும் அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, மே 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சமையல் எண்ணெய் மறுசுழற்சி திட்டத்தில் பங்கேற்குமாறு முகநூல் மூலம் எம்பிஎஸ் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது.

மூன்று கிலோவுக்கும் அதிகமான சமையல் எண்ணெயைக் கொண்டு வந்த ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் தாய்மார்கள் அடங்கிய 100 பங்கேற்பாளர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.