SELANGOR

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு RM3,000 உதவி - எம்பிஐ

23 மே 2023, 3:53 AM
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு RM3,000 உதவி - எம்பிஐ

ஷா ஆலம், மே 23: உலு லங்காட் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்கள் சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ மூலம் RM3,000 உதவியைப் பெற்றன.

சுகாதாரக் கருவிகள் மற்றும் உணவுப் பொருட்களைத் தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM300 ஆரம்ப உதவியை அவரது தரப்பு வழங்கியதாக அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் தலைவர் அஹ்மத் அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.

" முதலில் ரொக்கமாக RM300 வழங்கப்பட்டது. மீதமுள்ளவை ஆவணப்படுத்தல் செயல்முறை முடிந்த பிறகு வழங்கப்படும்.

"பதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க எம்பிஐ சுகாதார கருவிகள் மற்றும் உணவுகளை அவர்களுக்கு வழங்கியது," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

நேற்று கம்போங் டத்தோ முஃப்தி ஷுயிப், டத்தோ லங்காட்டில் உள்ள பொது மண்டபத்தில் தஞ்சம் அடைந்துள்ள தீயில் பாதிக்கப்பட்டவர்களை அஹ்மட் அஸ்ரி சென்று கண்டார்.

இதற்கிடையில், ஸ்மார்ட் சிலாங்கூர் செயல்பாட்டு மையம் (SSOC) ஒரு அறிக்கை மூலம் தீ விபத்தில் மூன்று குடும்பங்கள் உட்பட மொத்தம் 23 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தது..

பாதிக்கப்பட்ட அனைவரும் கம்போங் தெங்கா, கம்போங் டத்தோ முஃப்தி ஷுயிப் மக்கள் மண்டபத்தில் உள்ள தற்காலிகத் தங்கும் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எஸ்எஸ்ஓசி தெரிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.