ECONOMY

189 தொழிற்சங்கங்களுக்கு மனிதவள அமைச்சு 26 லட்சம் வெள்ளி மானியம்- தோட்டத்  தொழிலாளர் சங்கம்  வெ.19,000  பெற்றது

22 மே 2023, 4:48 PM
189 தொழிற்சங்கங்களுக்கு மனிதவள அமைச்சு 26 லட்சம் வெள்ளி மானியம்- தோட்டத்  தொழிலாளர் சங்கம்  வெ.19,000  பெற்றது

ஈப்போ மே 22-  தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு 19 ஆயிரம் வெள்ளி மானியத்தை மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.

கடந்த வாரம்  ஈப்போ இம்பியானா ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிதி வழங்கும் நிகழ்வில் மனிதவள  அமைச்சர் வி.சிவக்குமார் சார்பில்  மலேசிய தொழிற்சங்க பதிவு இலாகாவின் தலைமை இயக்குனர்  கமால் பின் பாட்லி தலைமைத் தாங்கினார்.

இந்த நிகழ்வில்  189 தொழிற்சங்கங்களுக்கு மொத்தம் 26 லட்சம் வெள்ளி மானியம்  வழங்கப்பட்டது. இதில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் 19,000 வெள்ளிப் பெற்றது.

தேசியத்  தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக சிலாங்கூர் மாநில செயலாளர் வை.தாமாசேகரன், பேராக் மாநில தலைவர் ரசாக் மற்றும்  மாநில செயலாளர் மு. குணாசன் ஆகியோர் மானியத்தை  பெற்றுக் கொண்டனர்.

தொழிற்சங்கங்களை சேர்ந்த கமிட்டி உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கு ஏதுவாக தொழிற்சங்கங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே 19,000 வெள்ளியை வழங்கிய மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு தேசிய தோட்டத் தொழிற்சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.