SELANGOR

கோடை காலம் நீடித்தாலும் சிலாங்கூரில் நீர் வழங்கல் நடவடிக்கை ஆறு மாதங்கள் வரை நீடிக்கும்

18 மே 2023, 8:24 AM
கோடை காலம் நீடித்தாலும் சிலாங்கூரில் நீர் வழங்கல் நடவடிக்கை ஆறு மாதங்கள் வரை  நீடிக்கும்

கோலா சிலாங்கூர், மே 18: கோடை காலம் நீடித்தாலும் சிலாங்கூரில் நீர் வழங்கல்

நடவடிக்கை ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

ஏழு அணைகளில் இதுவரை 95 சதவீதத்துக்கும் அதிகமான நீர்மட்டம் பதிவாகி

உள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“அதனால், மழை பெய்யவில்லை என்றால் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை சமாளிக்க

முடியும்.

"இப்போது எல் நினோ நிகழ்வு நிகழ்கின்ற போதிலும் மழையும் பெய்கிறது. எனவே,

இதன்வழி நீர் விநியோகத்தை அதிகரிக்கவும் முடியும்," என்று அவர் இன்று ரிவர்சைடு

ஹைப்ரிட் மேம்பாட்டு அமைப்பு (ஹோரஸ்) 600 தளத்தில் மூல நீர் உத்தரவாதத்

திட்டத்தை நிறைவேற்றிய பிறகு கூறினார்.

வெப்பமான காலநிலை காரணமாக அணையின் கொள்ளளவு குறைந்தால் இரண்டு

மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய 98 நீர்த்தேக்கங்களில் இருந்து மாநிலத்திற்கு நீர்

விநியோகம் உள்ளது என்றும் அமிருடின் மேலும் கூறினார்.

“இவையெல்லாம் வறட்சி ஏற்பட்டால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகும். குளத்தில்

உள்ள தண்ணீரை உறிஞ்சி ஆற்றுக்கு அனுப்பி விடுவோம். இத்திட்டம் இரண்டு

மாதங்கள் நீடிக்கும்,'' என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.