SELANGOR

ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் நிகழ்வில் இலவசச் சுகாதாரப் பரிசோதனை ஏற்பாடு

18 மே 2023, 4:40 AM
ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் நிகழ்வில் இலவசச் சுகாதாரப் பரிசோதனை ஏற்பாடு

கோலா சிலாங்கூர், மே 18: புக்கிட் மெலாவத்தி தொகுதியில் சிலாங்கூர் சுகாதார குழுவின் (சுகா) தன்னார்வத் தொண்டர்கள், ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் நிகழ்விற்கு வருபவர்களுக்கு இங்குள்ள சுராவ் அல்-ஃபலா, தாமான் சிரம்பையில் இலவசச் சுகாதாரப் பரிசோதனை சேவையை வழங்கினார்

வருகையாளர்களுக்கு இலவசச் சுகாதார பரிசோதனையை மேற்கொள்ள, சுகாதார குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களைப் பகிர்ந்து கொள்ள மொத்தம் 10 தன்னார்வலர்கள் அந்த இடத்தில் நியமிக்கப்பட்டனர் என அதன் ஒருங்கிணைப்பாளர் நார்மனிஸ் அப்த் ரஹ்மான் கூறினார்.

"எப்போது தேவைப்பட்டாலும், அழைக்கப்பட்டாலும், சுகா குழு உறுப்பினர்கள் வருகையாளர்களுக்குச் சுகாதாரப் பரிசோதனையைச் செய்ய வருவார்கள் மற்றும் ஐடில்பித்ரியை முன்னிட்டு மாநில அரசின் விற்பனை திட்டத்தில் நாங்கள் பங்கேற்பது இது மூன்றாவது முறையாகும்.

"காலை 9.30 மணி முதல் 70க்கும் மேற்பட்ட நபர்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த பரிசோதனைக்கு வந்திருந்தனர். இதன் வழி குடியிருப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவு மிகவும் ஊக்கமளிக்கிறது," என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.

"தன்னார்வலர்கள் மருத்துவர்கள் அல்ல ஆனால், பயிற்சி பெற்றவர்கள். நாங்கள் மக்களுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்குகிறோம். மேலும், பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் மருந்தை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எப்போதும் நினைவூட்டுகிறோம்.

சமூகத்தில் உள்ள மக்கள் ஆரோக்கியமாக வாழ உதவ வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றார் அவர்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் சுகா ஆகஸ்ட் 2021 இல் தொடங்கப்பட்டது. சிலாங்கூரில் வசிக்கும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மற்றும் நல்ல ஆரோக்கியம் உள்ள குடிமக்களுக்கு இது திறக்கப்பட்டுள்ளது.

1,800க்கும் மேற்பட்ட தனி நபர்கள் இணைந்து, மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுகா, 56 மாநில சட்டமன்றங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் உள்ளடக்கியது.

இந்த திட்டத்திற்கு RM1.2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் ஒவ்வொரு தொகுதியும் RM18,000 யைப் பெறுகிறது. இதனால் பயனளிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் மற்றும் தன்னார்வலர்களுக்கு பொருத்தமான பயிற்சிகளையும் வழங்க இயலும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.