SELANGOR

332 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பிங்காஸ் உதவி திட்டத்தின் கீழ் RM300 (மாதம்) பெற்றனர்

15 மே 2023, 8:28 AM
332 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பிங்காஸ் உதவி திட்டத்தின் கீழ் RM300 (மாதம்) பெற்றனர்

ஷா ஆலம், மே 15: சுங்கை ஆயர் தாவார் தொகுதியில் மொத்தம் 332 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் சிலாங்கூர் வளமான வாழ்க்கை உதவி (பிங்காஸ்) கீழ் RM300 (மாதம்) பெற்றனர்.

இந்த மாதாந்திர உதவியானது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அக்குடும்பங்களுக்குப் பெரிதும் உதவுகிறது என்று மக்களின் பிரதிநிதியான டத்தோ ரிசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

"இத்திட்டத்திற்கு பலர் விண்ணப்பிக்கிறார்கள், ஆனால் ஒவ்வொரு தொகுதிக்கும்  ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையின்  படி,  உதவி  வழங்கப்படுகிறது.  எவ்வாறாயினும், அதிகமான குடியிருப்பாளர்கள் இந்த உதவிக்கு  விண்ணப்பிப்பதை தொடர்ந்து மேலும் அதிக  ஒதுக்கீடுகளை வழங்க கேட்டுக் கொள்கிறோம்.

"பெரும்பாலான குடியிருப்பாளர்கள் குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் சராசரியாக அவர்கள் அனைவரும் கிராமத்தில் வேலை செய்பவர்கள். அவர்களுக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன, அதனால், அவர்களுக்கு உதவ வேண்டும்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

பிங்காஸ் 46 மக்கள் நலன் திட்டங்களில்  ஒன்றாகும், இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இது RM108 மில்லியன் ஒதுக்கீட்டில் 30,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் பயனளிக்கிறது.

உதவி பெறுநர்கள் பொருட்கள் வாங்குவதை  எளிதாக்குவதற்காக, Wavpay இ-வாலட் பயன்பாட்டின் மூலம் மாதத்திற்கு RM300 அல்லது வருடத்திற்கு RM3,600 உதவித் தொகை விநியோகிக்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.