SELANGOR

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மேற்கொண்ட வெள்ளத் தணிப்பு திட்டம் நிறைவடைந்துள்ளது

12 மே 2023, 10:25 AM
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மேற்கொண்ட வெள்ளத் தணிப்பு திட்டம் நிறைவடைந்துள்ளது

பெட்டாலிங் ஜெயா, மே 12: இங்குள்ள ஜாலான் எஸ்எஸ் 2/6 இல் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் வடிகால் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஏற்படும் பிரச்சனையைச் சமாளிப்பதற்கான வெள்ளத் தணிப்புத் திட்டம் நிறைவடைந்துள்ளது.

ஆகஸ்ட் 2022 இறுதியில் பெட்டாலிங் ஜெயா மாநகாரட்சியில் வடிகால் மேம்படுத்தும் பணி கடந்த ஜனவரியில் முழுமையாக நிறைவடைந்ததாக கம்போங் துங்கு மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ADN) தெரிவித்தார்.

"ஒவ்வொரு முறை கனமழை பெய்யும் போதும் வடிகால் பரப்பளவு குறைவாக இருப்பதால் குடியிருப்பாளர்களின்  வீடுகளுக்குள் நீர் பெருக்கெடுக்கும் அளவுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

"எனவே, பெட்டாலிங் ஜெயா மாநகாரட்சி (ஜாலான் SS 2/9 (மஸ்ஜித் அமினா அல்-முகைரி)இல் உள்ள 'கீழ் நீரோடை' பகுதியை மேம்படுத்தியது மற்றும் வடிகால் நீர் நிரம்பி வழிவதைத் தடுக்க ஓர் அணையைக் கட்டியது" என்று லிம் யி வெய் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஜாலான் எஸ்எஸ் 2/10 இல் உள்ள வணிக மையப்பகுதியிலிருந்து (அப்ஸ்ட்ரீம்) அதிக நீர் பாய்ச்சலைக் குறைக்க வடிகால் (ஜாலான் எஸ்எஸ் 2/9) மீது ஒரு புறவழி நீரோடை கட்டப்பட்டது என்று அவர் விளக்கினார்.

கிட்டத்தட்ட 100,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டத்தில் சுமார் 500 மீட்டர் நீளமுள்ள திறந்த வடிகால் கால்வாய் கட்டப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.