ECONOMY

பாண்டான் இண்டா தொகுதியின் நோன்பு பெருநாள் உபசரிப்பில் 5,000 பேர் பங்கேற்றனர்

7 மே 2023, 5:26 AM
பாண்டான் இண்டா தொகுதியின் நோன்பு பெருநாள் உபசரிப்பில் 5,000 பேர் பங்கேற்றனர்

அம்பாங், மே 7- பாண்டான் இண்டா தொகுதியின் ஏற்பாட்டில் நேற்றிரவு நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வருகையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பொது உபசரிப்பு கம்போங் பாண்டான் டாலாம், நுருள் ஹிடாயா பள்ளிவாசல் அருகில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் இரவு 7.45 மணி தொடங்கி நடைபெற்றது.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வுக்கு பொது மக்கள் வழங்கிய மகத்தான ஆதரவு, தொகுதி மீது மக்கள் காட்டி வரும் ஆதரவைப் புலப்படுத்துவதாக உள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இதற்கு முன்னர் இந்த தொகுதியில் நடத்தப்பட்ட பெருநாள் உபசரிப்பு களிலும் பொதுமக்கள் ஆதரவு சிறப்பாகவே இருந்தது. மற்றத் தொகுதிகளிலும் இதே போன்ற ஆதரவு உள்ளதாக அறிகிறோம் என்றார் அவர்.

இத்தகைய பொது உபசரிப்பு நிகழ்வுகளுக்கு பொது மக்கள் வழங்கி வரும் அபரிமித ஆதரவுக்கு பெருந்தொற்று முடிவுக்கு வந்தது காரணமாக இருக்கலாம் என்று செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

இந்த பொது உபசரிப்பில் தகவல் இலாகா கலைஞர்களை பங்கு கொண்டு கலைப்படைப்புகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் இடம் பெற்ற அதிர்ஷ்டக் குலுக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு குளிர்பதனப் பெட்டி, மடிக்கணினி, கைபேசி போன்ற கவர்ச்சிகரமான பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

மேலும், 600 சிறுவர்கள் மற்றும் 150 மூத்த குடிமக்களுக்கு நோன்புப் பெருநாள் ரொக்க அன்பளிப்பும் வழங்கப்பட்டது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.