ECONOMY

நாளை தொடங்கி மூன்று இடங்களில் மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு

4 மே 2023, 9:30 AM
நாளை தொடங்கி மூன்று இடங்களில் மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு

ஷா ஆலம், மே 4- இம்மாதம் 5ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை உலு லங்காட், பெட்டாலிங் மற்றும் கோல லங்காட் ஆகிய மூன்று மாவட்டங்களில் மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நடைபெறவுள்ளது.

ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டில்பித்ரி எனும் இந்நிகழ்வு நாளை 5ஆம் தேதி உலு லங்காட் தாமான் ஸ்ரீ நண்டிங் அகோரா இரவுச் சந்தை பகுதியிலும் பெட்டாலிங் 6ஆம் தேதி பெட்டாலிங் மாவட்டத்தின் சுங்கை பூலோ இரவுச் சந்தை பகுதியிலும் 7ஆம் தேதி கோல லங்காட், சிஜாங்காங் தாமான் பெர்வீராவிலும் நடைபெறும்.

இது தவிர இம்மாதம் 12ஆம் தேதி சபாக் பெர்ணம், டத்தாரான் தானா லேசேன் பகுதியிலும் 13ஆம் தேதி கோல சிலாங்கூர் பொது மைதானத்திலும் 14ஆம் தேதி ஆப்டவுன் ஸ்ரீ கோம்பாக்கிலும் இந்த உபசரிப்பு நிகழ்வு நடைபெறும். ஸ்ரீ கோம்பாக்கில் நடைபெறும் விருந்து நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹம் கலந்து கொள்வார்.

இந்த நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு தொடரின் முதல் மூன்று நிகழ்வுகள் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி சிப்பாங், உலு சிலாங்கூர் மற்றும் கிள்ளானில் நடைபெற்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.