SELANGOR

பெந்தோங் டோல் பிளாசா வாயிலில் கார் மோதியதில், மயங்கிய குடும்பம் அதன் அனுபவத்தைப் பகிர்ந்தது

30 ஏப்ரல் 2023, 8:17 AM
பெந்தோங் டோல் பிளாசா வாயிலில் கார் மோதியதில், மயங்கிய குடும்பம் அதன் அனுபவத்தைப் பகிர்ந்தது

ஷா ஆலம், ஏப்ரல் 30: கடந்த திங்கட்கிழமை பெந்தோங் டோல் பிளாசா வாசலில் கார் மோதியதில், மயங்கிய நிலையில் இருந்த நபர் தனது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற மூன்று பேருடன் அவரின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

52 வயதான நோர் வாஹித், வாகனத்தில் வலுவான பெட்ரோல் வாசம் இருந்ததாகவும் அதே நேரத்தில் போக்குவரத்து மிகவும் மெதுவாக நகர்ந்ததாகவும் தெரிவித்தார்.

"பெந்தோங் டோல் பிளாசாவை நெருங்கும் போது, நான் ஜன்னலைத் திறந்தேன். ஆனால் வெளியே வெப்பநிலை மிகவும் சூடாக இருந்தது. திடீரென்று, உடல்நிலை சரி இல்லாதது போல் உணர்ந்தேன். அதனால், கட்டணம் செலுத்திய பிறகு காரை ஓட்ட முடியுமா என்று என் மனைவியிடம் கேட்டேன், ஆனால் பதில் இல்லை.

"என் மனைவி, மகள் மற்றும் உறவினர் மகள் அனைவரும் சோர்வாக இருப்பதனால் நன்றாக தூங்குகிறார்கள் என்று நான் நினைத்தேன். திடீரென்று என்னால் வாகனம் ஓட்டுவதில் கவனம் செலுத்த முடியவில்லை, ஏனென்றால் என் பார்வை மங்கலாகி விட்டது, மேலும், செவித்திறன் குறைவாக இருந்தது மற்றும் நான் பலவீனமாக உணர்ந்தேன்,`` என்றார்.

பின் பெந்தோங் மருத்துவமனையில் மயக்கமடைந்த நிலையில் தானும் மூன்று குடும்ப உறுப்பினர்களும் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை, மேற்கு நோக்கிய பெந்தோங் டோல் பிளாசாவின் வாயிலில் மோதிய காரில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டது.

"அவர்களின் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவர்கள் சுயநினைவின்றி இருப்பதை மருத்துவப் பரிசோதனை உறுதிப்படுத்தியது" என்று சப்ட் சைஹாம் முகமட் கஹர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.