ECONOMY

நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை முன்னிட்டு சாலைகள் 10 நாட்களுக்கு மூடப்படும்- எம்.பி.கே.எல். அறிவிப்பு

28 ஏப்ரல் 2023, 10:28 AM
நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை முன்னிட்டு சாலைகள் 10 நாட்களுக்கு மூடப்படும்- எம்.பி.கே.எல். அறிவிப்பு

ஷா ஆலம், ஏப் 28- வரும் மே மாதம் 7ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டில்பித்ரி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை முன்னிட்டு சில சாலைகளை கோல லங்காட் நகராண்மைக் கழகம் போக்குவரத்துக்கு  தற்காலிகமாக மூடவுள்ளது.

பாசார் மாலாம் பகுதி மற்றும் ஜாலான் வீரா 2, தாமான் பெர்வீரா ஆகிய சாலைகள் வரும் மே மாதம் முதல் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை மூடப்படும் என்று நகராண்மைக்கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இந்த பொது உபசரிப்பு நிறைவு பெறும் வரை மாற்றும் வழிகளைப் பயன்படுத்தும்படி பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம். உங்கள் ஆதரவைப் பெரிதும் போற்றுகிறோம் என அது தெரிவித்தது.

கோல லங்காட் மாவட்ட நிலையிலான பொது உபசரிப்பு வரும் மே 7ஆம் தேதி சிஜங்காங், தாமான் பெர்வீராவில் இரவு 8.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறவுள்ளது.

விருந்துபசரிப்புடன் கூடிய இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு நகராண்மை கழகம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டது.

இந்த நிகழ்வில் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளதோடு இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்ட பதிவும் நடைபெறும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.