SELANGOR

 ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் 10,000 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு

25 ஏப்ரல் 2023, 11:33 AM
 ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் 10,000 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு

ஷா ஆலம், ஏப்ரல் 25: ஏப்ரல் 30ஆம் தேதி கிள்ளான், தாமான் ஸ்ரீ கெராயோங் திடலில் நடைபெறும் மாநில அரசின் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் மொத்தம் 10,000 விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோரும் கலந்து கொள்வர் என கலாச்சார எஸ்கோ தெரிவித்துள்ளது.

"இந்தத் திட்டம் ``ரேவாங் செகாம்புங்`` என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது. அதனால், ஒவ்வொரு கம்போங்கும் துப்புரவு நடவடிக்கை முறையில் அதன் சொந்த மெனுவைக் கொண்டு உணவைத் தயார் செய்யும்.

“உணவு சமைக்கும் நடவடிக்கை காலை 8 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். பின் அவை அன்று இரவு பரிமாறப்படும் என்று போர்ஹான் அமான் ஷா சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இத்திட்டம் ஒவ்வொரு வாரமும் பெக்கான் சலாக்கில் உள்ள காலை சந்தை தளத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் (ISP) மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு மாநில அரசாங்கத்தின் திட்டங்கள் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.