ECONOMY

ஜோகூர் சுல்தானின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் 18,000 பேர் பங்கேற்பு

23 ஏப்ரல் 2023, 11:09 AM
ஜோகூர் சுல்தானின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் 18,000 பேர் பங்கேற்பு

ஜோகூர் பாரு, ஏப் 23- இங்குள்ள இஸ்தானா பெசாரில் ஜோகூர் சுல்தான்

ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில்

வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் சேர்ந்த சுமார் 18,000 பேர்

கலந்து கொண்டனர்.

சுல்தான் இப்ராஹிம் ஷா ஏற்பாட்டில் நோன்புப் பெருநாளின் இரண்டாவது

தினமான இன்று நடைபெற்ற இந்த உபசரிப்பில் கலந்து கொள்ள

வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் உள்பட திரளான பொது மக்கள் காலை 7.00

மணி முதல் வாயிற் கதவின் முன் வரிசையில் காத்திருந்தனர்.

காலை 9.00 மணியளவில் பொதுமக்கள் அரண்மனை வளாகத்தில்

அனுமதிக்கப்பட்டனர். காலை 10.00 மணிக்கு அரண்மனை வந்த சுல்தான்

சுமார் ஒரு மணி நேரத்தைச் செலவிட்டு விருந்தில் கலந்து

கொண்டவர்களுடன் அளவலாவினார்.

சுல்தானுடன் மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஷ், மாநிலச்

செயலாளர் டான்ஸ்ரீ அஸ்மி ரோஹானி மற்றும் மாநில போலீஸ்

தலைவர் டத்தோ கமாருள் ஜமான் மாமாட் ஆகியோரும் இந்நிகழ்வில்

கலந்து கொண்டனர்.

ஜோகூர் ராஜா பெர்மைசூரி ராஜா ஷரித் சோபியா அல்மார்ஹூம் சுல்தான்

இட்ரிஸ் ஷா, அவரின் பிள்ளைகளான ஜோகூர் தெங்கு தெமாங்கோங்

துங்கு இட்ரிஸ் இஸ்கந்தார், தெங்கு பங்ளிமா ஜோகூர் அப்துல் ரஹ்மான்

அல்-ஹாஜ், தெங்கு புத்ரா ஜோகூர் தெங்கு அபு பாக்கார் அல்-ஹாஜ்

ஆகியோரும் இந்த விருந்து நிகழ்வுக்கு வருகை புரிந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.