ECONOMY

மூன்று நாள் இலவச டோல் கட்டணச் சலுகை முடிந்தது- நாளை இலவச பயண வாய்ப்பு

23 ஏப்ரல் 2023, 3:41 AM
மூன்று நாள் இலவச டோல் கட்டணச் சலுகை முடிந்தது- நாளை இலவச பயண வாய்ப்பு

கோலாலம்பூர், ஏப் 23- நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள 33 நெடுஞ்சாலைகளில் அனைத்து வகை வாகனங்களுக்கும் வழங்கப்பட்ட மூன்று நாள் இலவச டோல் கட்டண சலுகை நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.

இந்த சலுகை இரண்டு நாள் இடைவெளிக்குப் பின்னர் வரும் 24ஆம் தேதி மீண்டும் அமல்படுத்தப்படும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

ஆகவே, வாகனமோட்டிகள் நெடுஞ்சாலையில் நுழைவதற்கு முன்னர் டச் அண்ட் கோ அல்லது இ-வாலட் செயலியில் போதுமான அளவு பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளும்படி அது கேட்டுக் கொண்டது.

நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் வாகனமோட்டிகளின் வசதிக்காக இலவச ரஹ்மா டோல் கட்டணத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் கூறியிருந்தார்.

இந்த இலவச டோல் கட்டணச் சலுகை ஏப்ரல் 19 முதல் 21ஆம் தேதி வரையிலும் பின்னர் 24ஆம் தேதியும் அமலில் இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.