SELANGOR

300 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு இலவசப் பெட்ரோல்

20 ஏப்ரல் 2023, 3:31 AM
300 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு இலவசப் பெட்ரோல்

ஷா ஆலம், ஏப்ரல் 20: பத்தாங் காலி தொகுதியில் மொத்தம் 300 மோட்டார் சைக்கிள்

ஓட்டுனர்கள் நேற்று ராயாவை முன்னிட்டு இலவசப் பெட்ரோல் திட்டத்தின் மூலம்

பெட்ரோல் பெற்றனர்.

தொகுதி ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முஹம்மது கூறுகையில், 250 ccக்கு கீழ்

உள்ள ஒவ்வொரு மோட்டார் சைக்கிள் டேங்கிற்கும் முழு பெட்ரோல் நிரப்பப் பட்டது.

அவரது கருத்துப்படி, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்று பெட்ரோல்

நிலையங்களில் கட்டம் கட்டமாக நடந்த இந்நிகழ்வு, பத்தாங் காலி தொகுதியின் மக்கள்

சேவை மையம், செந்தோசா ரவாங் இளைஞர் கழகம் மற்றும் பத்தாங் காலி மாநிலத்தின்

சிலாங்கூர் இளைஞர் அணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வு ஷெல் லிகாமாஸ் பத்தாங் காலி, பெட்ரோனாஸ் செரெண்டா மற்றும்

பெட்ரோன் புக்கிட் செந்தோசா ஆகிய மூன்று பெட்ரோல் நிலையங்களில் நடைபெற்றது.

ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் 100 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் பெட்ரோல்

நிரப்ப அனுமதிக்கப்பட்டனர்,``என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.