SELANGOR

மழை மற்றும் பலத்த காற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு எம்பிஐ மூலம் உதவி

16 ஏப்ரல் 2023, 2:58 AM
மழை மற்றும் பலத்த காற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு எம்பிஐ மூலம் உதவி

ஷா ஆலம், ஏப்ரல் 16: மழை மற்றும் பலத்த காற்றால் பாதிக்கப்பட்ட கிரீன்வூட்டில் உள்ள ரம்லான் பஜார் வர்த்தகர்களுக்குச் சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ மூலம் உதவி வழங்கப்படும்.

இந்த விஷயத்தை டத்தோ மந்திரி புசார் ஒரு சமூக ஊடக பயனர் ஆரிஃப் அசிராஃப் என்பவருக்குப் பதிலாகத் தெரிவித்தார்.

"எட்டு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப தகவல் படி அவர்களுக்கு விரைவில் உதவி வழங்கப்படும்," என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

ஐந்து நிமிடங்களில் ஏற்பட்ட மழை மற்றும் பலத்த காற்றால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால், ரம்லான் பஜார் வியாபாரிகளின் பல கூடாரங்கள் கவிழ்ந்து இடிந்து விழுந்தன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.