SELANGOR

மூன்று இடங்களில் ரம்லான் பண்டிகையின் வணிக நேரம் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு

11 ஏப்ரல் 2023, 8:30 AM
மூன்று இடங்களில் ரம்லான் பண்டிகையின் வணிக நேரம் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு

ஷா ஆலம், ஏப்ரல் 11: சிலாங்கூர் ரம்லான் பண்டிகையின் (ஃபெஸ்டிரா) வணிக நேரம் மூன்று இடங்களில் இன்று தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஏசிசி ஷாப்பிங் சென்டர், ஷா ஆலம் பிகேஎன்எஸ் மற்றும் பாங்கி பிகேஎன்எஸ் ஆகிய இடங்களில் சியாவால் கொண்டாட்டம் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும் என்று பிகேஎன்எஸ் ரியல் எஸ்டேட் (பிஆர்இசி) தெரிவித்துள்ளது.

ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் வணிக மையத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஃபக்ரு ராட்ஸி அப் கானி விளக்கினார்.

" பள்ளி விடுமுறைகள் நெருங்கிவிட்டன. எனவே இந்த வணிக மையங்கள் நிச்சயமாகப் பொது மக்களின் தேர்வாக இருக்கும், எனவே நாங்கள் வணிக நேரத்தைச் நீட்டிக்கிறோம்," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஃபக்ரு ராட்ஸி விற்பனையில் திருப்தி அடைந்தார். இது வார இறுதி நாட்களில் RM7,000 முதல் RM20,000 வரை சென்றது, மேலும் வார நாட்களில் RM3,000 முதல் RM5,000 வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

"இந்த வாரம் பெரும்பாலான மக்கள் ராயா சிறப்பு நிதி  பெறுவதால் அதிக விற்பனை நடைபெறும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

'ஃபெஸ்டிரா-யா!' என்ற கருப்பொருளில், ஃபெஸ்டிரா 2023 மார்ச் 5 முதல் ஏப்ரல் 21 வரை 48 நாட்களுக்கு 2.5 மில்லியன் வருகையாளர்களை இலக்காகக் கொண்டது.

இந்நிகழ்வில் கடந்த ஆண்டு 700 தொழில் முனைவோர் பங்கேற்றதை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 1,000 தொழில்முனைவோரை ஈர்த்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.