ECONOMY

சிப்பாங்கில் உள்ள ஒரு எழுதுபொருள் கடையில், பட்டாசுகள் வைக்கப்பட்டு இருக்கும் என்று சந்தேகிக்கப் பட்டு போலீசார் சோதனை நடத்தினர்

7 ஏப்ரல் 2023, 2:06 AM
சிப்பாங்கில் உள்ள ஒரு எழுதுபொருள் கடையில், பட்டாசுகள் வைக்கப்பட்டு இருக்கும் என்று சந்தேகிக்கப் பட்டு போலீசார் சோதனை நடத்தினர்

புத்ராஜெயா, ஏப்.7: பட்டாசுகள் சேமிக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு சிப்பாங்கின் தாமன் செரோஜாவில் உள்ள ஒரு எழுதுபொருள் கடையை போலீசார் நேற்று சோதனை செய்து, அதன் உரிமையாளரான 33 வயது பெண்ணை கைது செய்தனர்.

அக்கடையில் இருந்து, 283 "ஹேப்பி பூம் பிலி கிராக்கர்ஸ்" பெட்டிகள், 256 "ஹேப்பி பூம் க்ளோரிஸ்" மற்றும் 68 "ஹேப்பி பூம்" பெட்டிகள் என பல்வேறு வகையான பட்டாசுகளை போலீசார் கண்டுபிடித்ததாக சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார். நேற்றிரவு 7 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 60,000 ரிங்கிட் மதிப்பிலான பட்டாசு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

"ஹேப்பி பூம் ஷூட் கேக்" இன் 192 யூனிட்கள், 58 யூனிட்கள் "ஹேப்பி பூம் அஸர்ட்டட் செலிப்ரேஷன் கேக் ரிப்பீட்டர்" மற்றும் 33 பேக் "ஹேப்பி பூம் ரெட் கிராக்கர்" போன்ற அங்கீகரிக்கப்படாத பட்டாசுகள் வளாகத்தில் காணப்பட்டன.

வெடிபொருள் சட்டம் 1957 பிரிவு 8ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும், சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் பிணையில் இன்று விடுவிக்கப்படுவார், என்றார்.

– பெர்னாமா

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.