SELANGOR

செலாயாங் உத்தாமா ரமலான் பஜாரை ஆய்வு செய்ததில் 15 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டன

29 மார்ச் 2023, 8:59 AM
செலாயாங் உத்தாமா ரமலான் பஜாரை ஆய்வு செய்ததில் 15 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டன

ஷா ஆலம், மார்ச் 29: செலாயாங் மாநகராட்சி (எம்பிஎஸ்), நேற்று செலாயாங் உத்தாமா ரமலான் பஜாரில் 100 ஸ்டால்களை ஆய்வு செய்து 15 நோட்டீஸ்களை வெளியிட்டது.

டைபாய்டு ஊசி போடாதது மற்றும் தேவைக்கேற்ப உணவு கையாளும் அனுபவம் இல்லாத வியாபாரிகளுக்கு இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

"கோம்பாக் மாவட்ட சுகாதார அலுவலகத்துடன் இணைந்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

"உணவு கையாளுதல் நிர்ணயிக்கப்பட்ட தரத்தின்படி உள்ளதா என்பதை சரிபார்க்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

வணிகம் செய்யும் போது ஏப்ரன்கள், தொப்பிகள் மற்றும் முகக்கவரிகளை அணியுமாறு வர்த்தகர்களுக்கு செலாயாங் மாநகராட்சி நினைவூட்டுகிறது.

உணவை கையாளும் ஒவ்வொரு வணிகரும் டைபாய்டு ஊசி போட்டு இருப்பதையும் மற்றும் உணவு கையாளும் வகுப்பிற்குச் சென்றிருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.