SELANGOR

சுங்கை பத்தாங் காலி பாலத்தை அகலப்படுத்தும் திட்டம் செப்டம்பர் 6ஆம் தேதி நிறைவடையும்

25 மார்ச் 2023, 7:52 AM
சுங்கை பத்தாங் காலி பாலத்தை அகலப்படுத்தும் திட்டம் செப்டம்பர் 6ஆம் தேதி நிறைவடையும்

ஷா ஆலம், மார்ச் 25: உலு சிலாங்கூர், சுங்கை பத்தாங் காலி பாலத்தை அகலப்படுத்தும் திட்டம் செப்டம்பர் 6ஆம் தேதி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ADN) கோலா குபு பாரு லீ கீ ஹியோங் கூறுகையில், திட்டத்தின் வேலை அட்டவணையில் 81 சதவீதத்தை எட்டியுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி 32 மில்லியன் ரிங்கிட் செலவில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஐந்து பாதைகளைக் கொண்டிருக்கும்.

குறிப்பாக இத்திட்டம் ராசா முதல் பத்தாங் காலி வரையிலான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது என முகநூலில் அவர் தெரிவித்துள்ளார்.

29 ஏப்ரல் 2020 அன்று முடிக்கப்பட வேண்டிய இத்திட்டம், பல தொழில்நுட்ப சிக்கல்களால் தாமதமானது. கோவிட்-19 பரவலின் போது இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையை (MCO) செயல் படுத்துதினால், பயன்பாடுகளை மாற்றுவதற்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

16 மே 2019 அன்று, மாநில அரசு உலு சிலாங்கூர் மாவட்டத்திற்கு RM69.2 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.