ஷா ஆலம், மார்ச் 25: கோலா லங்காட் மாநகராட்சி (MPKL) பொதுமக்களைக் குறிப்பாக வரலாற்று ஆர்வலர்களைக், கம்போங் பெர்மாதாங் பாசிரில் உள்ள இன்சிடு ஜுக்ரா அருங்காட்சியகத்தைப் பார்வையிட அழைக்கிறது.
கோலா லங்காட்டில் உள்ள சிலாங்கூர் சுல்தான் வாளகத்தில் ராஜ்ய வரலாறு, சிறை கட்டமைப்புகள், மினி நீதிமன்றங்கள் மற்றும் பழைய கிணறுகள் போன்ற அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் உட்பட பல்வேறு தகவல்கள் அருங்காட்சியகத்தில் உள்ளன.
பழைய ஜுக்ரா சிறைச்சாலை என்று அழைக்கப்படும் அருங்காட்சியகம் முதலில் 1878 இல் சுல்தான் அப்துல் சமட் ஆட்சியின் போது பிரிட்டிஷ் நீதித்துறை அமைப்பின் அடிப்படையில் நிர்வாக மற்றும் தண்டனை மையமாக கட்டப்பட்ட ஒரு காவல் நிலையமாகும்.
19 நவம்பர் 2002 அன்று வரலாற்று சிறப்புமிக்க இடமாக அரசிதழில் வெளியிடப்பட்ட கட்டிடத்தில் சிறைச்சாலை உபகரணங்களாக ஒரு பழைய கிணறு மற்றும் தொல்பொருள் தடயங்களும் உள்ளன.
இலவசமாகப் பார்வையிடக்கூடிய இந்த அருங்காட்சியகத்தில், மூன்று கண்காட்சி அறைகளுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளாக தொழுகை அறை, கழிவறைகளும், உண்டு.
பார்வையிடும் நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை (சனி முதல் வியாழன் வரை) ஆகும். வெள்ளிக்கிழமை மதியம் 12.30 முதல் 2.45 மணி வரை தற்காலிகமாக மூடப்படும்.
ஏதேனும் கேள்விகள் இருந்தால் சிலாங்கூர் மாநில மலாய் சுங்கம் மற்றும் பாரம்பரியக் கழகத்தை (Padat) 03-5519 0050 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.








