SELANGOR

சிலாங்கூர் அக்ரோ ஐகோன் 2022 இன் மூன்றாவது பதிப்பின் மூன்று வெற்றியாளர்கள் ஹரி ராயா கொண்டாட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படுவர்

20 மார்ச் 2023, 7:44 AM
சிலாங்கூர் அக்ரோ ஐகோன் 2022 இன் மூன்றாவது பதிப்பின் மூன்று வெற்றியாளர்கள் ஹரி ராயா கொண்டாட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படுவர்

சபாக் பெர்ணம், 20 மார்ச்: சிலாங்கூர் அக்ரோ ஐகோன் 2022 இன் மூன்றாவது பதிப்பின் வெற்றியாளர் ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டங்களுக்குப் பிறகு அறிவிக்கப்படுவார்.

மொத்தம் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருவரும் RM10,000 ரொக்கம் வழங்கப்படும் என்று விவசாய எஸ்கோ இர் இஷாம் அசிம் கூறினார்.

"மார்ச் மாதத்தில் சிலாங்கூர் அக்ரோ ஃபெஸ்ட் 2023 நிகழ்ச்சியின் போது அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளோம், ஆனால் சில பங்கேற்பாளர்கள் வீடியோவை படமாக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் அது தாமதமானது.

"இதற்குப் பிறகு, நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வீடியோக்களை நாங்கள் ஆய்வு செய்வோம் மற்றும் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்போம். பங்கேற்பாளர்களுக்கு நல்வாழ்த்துக்கள், ," என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் அக்ரோ ஐகோன் 2022 இன் மூன்றாவது பதிப்புக்கான 23 பேரில் மொத்தம் 10 வேளாண் தொழில்முனைவோர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, பயிர்கள், விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் வேளாண் சுற்றுலா என ஐந்து பிரிவுகள் போட்டியில் இடம்பெற்றன. வெற்றியாளர்களுக்கு விவசாய உபகரணங்களுடன் RM10,000 ரொக்கப் பரிசை வழங்கப்படும்

போட்டியின் அமைப்பு சிலாங்கூரை உணவு விநியோக மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் அதிகமான மக்களை விவசாயத் துறையில் ஈடுபட ஊக்குவிக்கிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.