SELANGOR

200 மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பும் திட்டத்தின் கீழ் நன்கொடைகளை பெற்றனர் – சபாக் தொகுதி

20 மார்ச் 2023, 4:58 AM
200 மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பும் திட்டத்தின் கீழ் நன்கொடைகளை பெற்றனர் – சபாக் தொகுதி

சபாக் பெர்ணம், மார்ச் 20: சபாக் தொகுதில் மொத்தம் 200 மாணவர்கள் நேற்று பள்ளிக்குத் திரும்பு திட்டத்தின் கீழ் நன்கொடைகளைப் பெற்றனர்.

இன்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதற்கு முன்னர் வவுச்சர்கள் வழங்கப்பட்டாலும் குழந்தைகளுக்கான பள்ளி பொருட்களை வாங்குவதற்கு அவற்றைப் பயன்படுத்த முடியும் என அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

"யாராவது ஏற்கனவே அனைத்து பள்ளி உபகரணங்களையும் வாங்கியிருந்தால், ஹரி ராயா தேவைகளை வாங்க பெற்றோர்கள் அந்த  வவுச்சரைப் பயன்படுத்த அனுமதிக்கிறோம்,`` என்றார்.

"எனவே, மக்களின் சுமையைக் குறைக்க உதவும் சபாக் தொகுதியின் பரிசாக இதை கருதுங்கள்" என்று அஹ்மட் முஸ்தைன் ஓத்மான் கூறினார்.

சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ இந்த ஆண்டு பள்ளிக்குத் திரும்பும் திட்டத்திற்காக RM1.68 மில்லியனை ஒதுக்கியது.

வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படும் நன்கொடையானது, மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளில் இருக்கும் மொத்தம் 16,800 தகுதி பெற்ற ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.